என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Monday, September 10, 2012
அவளின் இதயம்
குப்பைத் தொட்டி
என்பதால்
கசக்கி எறிந்தால்
என் காதலை
ஒற்றை பார்வை
ஒற்றை பார்வையில்
திருக்குறளாய்
அர்த்தம் பல சொல்கிறாய்
ஓரப்பார்வையில்
ஹைக்கூவாய்
குழப்பிக் கொல்கிறாய் !
Friday, February 10, 2012
பெண்ணே ஞாபமிருக்கா
அன்று
ஒற்றை மரத்தடியில்
உனக்கு
நான் கொடுத்த
முத்தங்கள்
அந்த மரம்
இன்றும் தன்
பசுமையை காட்டி
எனக்கு
ஞாபப்படுத்துகிறது அதை !
அட
அந்த பட்டாம்பூச்சி
என்ன அழகு
ஒருவேளை
அவளை உரசியே
தன்னில்
நிறங்களை
ஏற்றி இருக்குமோ
எத்தனை மரங்களுக்கு
தெரியும்
நீ என்
மனங்கொத்தி பறவை
என்பது !
உன் கவிதைகளுக்கு
தலைப்புகள் இல்லையே
என
நண்பன் கேட்டான்
நீ வெளியூரில்
இருப்பதாக
நான் சொன்னேன்
சரிதானே !
என் கவிதைகளை
ரசித்தவள்
என்பதால்
உன்னையும் நான்
ரசிக்கிறேன்
கவிதையாய் !
நான்
எல்லா கவிஞனின்
கவிதைகளையும் படிப்பேன்
ஆனால் எழுதுவது
என் கவிதையை மட்டுமே
நீயோ
நிலவின் அழகை வாங்கி
ஜொலிக்கிறாய்
Thursday, February 2, 2012
தானே புயல்
தானே புயலுக்கான
நிவாரண நிதி
எனக்கும் தரச்சொல்
உன் நினைவினில்
தவிப்பது
நானும் "தானே
பெண்மை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)