Friday, February 10, 2012

பெண்ணே ஞாபமிருக்கா

அன்று 
ஒற்றை மரத்தடியில்

உனக்கு 
நான் கொடுத்த
முத்தங்கள்

அந்த மரம்

இன்றும் தன்
பசுமையை காட்டி

எனக்கு
ஞாபப்படுத்துகிறது அதை !
அட
அந்த பட்டாம்பூச்சி
என்ன அழகு
ஒருவேளை
அவளை உரசியே
தன்னில்
நிறங்களை
ஏற்றி இருக்குமோ
எத்தனை மரங்களுக்கு
தெரியும்
நீ என்
மனங்கொத்தி பறவை
என்பது !
உன் கவிதைகளுக்கு
தலைப்புகள் இல்லையே
என
நண்பன் கேட்டான்
நீ வெளியூரில்
இருப்பதாக
நான் சொன்னேன்
சரிதானே !
என் கவிதைகளை
ரசித்தவள்
என்பதால்
உன்னையும் நான்
ரசிக்கிறேன்
கவிதையாய் !
நான்
எல்லா கவிஞனின் 
கவிதைகளையும் படிப்பேன்
ஆனால் எழுதுவது
என் கவிதையை மட்டுமே
நீயோ
நிலவின் அழகை வாங்கி
ஜொலிக்கிறாய்

Thursday, February 2, 2012

தானே புயல்

தானே புயலுக்கான 
நிவாரண நிதி 
எனக்கும் தரச்சொல் 
உன் நினைவினில்
தவிப்பது 
நானும் "தானே

பெண்மை