Sunday, May 8, 2011

அன்பின் தினம்

நம் ஆரம்பம்
அவளின் கருவறை
அவளே அன்பின்
வகுப்பறை
கருவில் முதலில்
பிறப்பது
இதயம் தானாம்
அதில் தாயை சுமக்கனும்
என்றும் நாமும்
அம்மா என்பவள்
அன்பு மட்டும் நிறைந்திருக்கும்
சிறு உலகம்
எனவே
அன்னையர் தினம் என்பதை
அன்பின் தினமாக்குவோம் !

அம்மா அம்மா


நான் பார்த்த முதல் நிலா
அம்மா
நான் படித்த முதல் புத்தகம்
அம்மா
நான் ரசித்த முதல் கவிதை
அம்மா
எனக்கு முதலில் சோறு இட்டவள்
அம்மா
என்னை முதலில் சிரிக்க வைத்தவள்
அம்மா
என்னை முதலில் அழ வைத்தவள்
அம்மா
எனக்கு முதல் முத்தம் கொடுத்தது
அம்மா
நான் முதல் முத்தம் கொடுத்தது
அம்மா
என் முதல் பாடகி
அம்மா
என் முதல் அழகி
அம்மா
மொத்தத்தில்
என்னை சுமந்த
முதல் உலகம்
அம்மா அம்மா அம்மா

அம்மா


உன் வாழ்க்கையால்
நிரப்பினாய் என்னை
சாதாரண வார்த்தைகளால்
நிரப்ப முடியாது
உன்னை
நீயே
என் அன்னை !

Saturday, May 7, 2011

வரம் வேண்டி

விடியும் பொழுதினில்
அடியே உன்
அழகினை
கனவாய் சுமக்கவே
வரம் வேண்டுகிறேன் !

வரம் வேண்டி

விடியும் பொழுதினில்
அடியே உன்
அழகினை
கனவாய் சுமக்கவே
வரம் வேண்டுகிறேன் !

ஏனோ

நீ குளிர்கின்ற தீயடி
எரிகின்ற நீரடி
உன்னில் விழுந்தவன் நானடி
நீ உணராதது ஏனடி!

கவிஞன் இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது

புத்தகம் படித்த
அனுபவம் இல்லை
என் புத்தியில் ஏதும்
அமிர்தமும் இல்லை
கவி கட்டிய நூலை
யார் கொடுக்கவும்
இல்லை
விழியில்
காட்டியவள் நீ
விரைந்து
தீட்டியவன் நான்
பின்பு நான்
எப்படி கவிஞனாவேன்

கவிஞன் இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது

புத்தகம் படித்த
அனுபவம் இல்லை
என் புத்தியில் ஏதும்
அமிர்தமும் இல்லை
கவி கட்டிய நூலை
யார் கொடுக்கவும்
இல்லை
விழியில்
காட்டியவள் நீ
விரைந்து
தீட்டியவன் நான்
பின்பு நான்
எப்படி கவிஞனாவேன்

நான்

நான் விடை தேடும்
வினாத்தாள்

சில நேரங்களில்
எனக்கு நானே
பதிலும் ஆகிறேன்

நீ கேள்வி கேட்கும்
தருணங்களில்
என் இதயம் ஆகிறது
வெற்று தாளாய் !

எச்சரிக்கை

உன் மேல்
நான் கொள்ளும் கோபம்

காரணம்

உன் செயல்
என்னை கொள்கிறதே

இதழ்கள் தனித்து
சிரிப்பதில்லை

இதயம் தன்
கண்ணை
வெறுப்பதில்லை

அது போல்
நானும்
என் உரிமையை
விட்டுகொடுப்பதில்லை

யாராருடனோ பழுகுகிறாய்
எங்கெங்கோ செல்கிறாய்

சரியில்லாத ஒன்றை
தவறில்லையே என்கிறாய்

வேண்டாமடி பெண்ணே

மை தீர்ந்த பேனாவில்
எழுதும் கவிதையாய்
என் நெஞ்சுக்குள்
உன் நினைவுகள்
முழுமையாக்கபடாமலேயே
முடிந்து போகலாம் !

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

அந்த தருணம்

பேசிவிட்டு
நாம் பிரியும்
கடைசி நிமிடத்திலும்
உன்னை
திரும்பி பார்த்துவிட்டே
செல்கிறேன்
இந்த பொழுது
நகராமல் அப்படியே
உறைந்து போக கூடாதா !

வருடுவதேன்

கண்கள் உறங்கும் நேரத்தில்
இதயம் இமைகளை
கவிதையை கொண்டு
வருடுவதேன் !

புது விதம்

உன்னாலே எந்தன்
நெஞ்சில்
பனிமழை
இந்த பெண்ணாலே
இன்று
என் மாற்றங்கள்
புது விதம் !

முத்தத்தின் வழியே

முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !

முத்தத்தின் வழியே

முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !

என் உலகம்

என் மேல்
அன்பின் அளவு
யாதென
அவள் கேட்டாள்
வானத்தை கை நீட்டி
அளந்து கொள்
என்றேன்

வானத்தில் மின்னல்கள்
சிரிப்பது போல்
உன் மேல் கோபத்தை
நான் கொஞ்சம்
தெளிக்கின்றேன்

நீ மௌனத்தால்
தண்டனை கொடுக்கையிலே
மறுகணம் கொஞ்சி
சிரிக்கின்றேன்

உனை போல
அழுகின்ற
மழை இல்லை

உனை போல
படர்கின்ற
நிழல் இல்லை

உலகில்
நீயும் என் தாயும்
போல
வேறு உறவில்லை !

சிறை

உனை சேர
காத்திருக்கும்
சில ஆண்டுகள்
உன்னை காதலித்த
குற்றத்திற்கு
நீ தரும்
சிறை தண்டனையா !

நினைப்பில் நீ

நீ
தோழியாக
இருந்த போது
நாளுக்கு ஒரு முறை
நினைத்தேன்
காதலியாக ஆன போது
உன் நினைப்பில் தான்
நாட்களை கடத்துகிறேன்
மாற்றங்கள்
உறவில் மட்டுமல்ல
உணர்விலும் கூட தான் !

மறக்கின்றேன்

உன் பிரிவின்
வேதனை
என் எண்ணங்களை
வெட்டி வீழ்த்துவதால்
கவிதை எழுதவும்
மறக்கின்றேன் !

ஞாயம் தானே

தூக்கத்தை
சிறை பிடித்து
விழியில்
அடைத்து பார்க்கிறேன்
ஏமாற்றி
தப்பி செல்கிறது தூக்கம்
நெஞ்சில் உன்
நினைவு இருக்கையில்
இது ஞாயம் தானே !

தூக்கமின்றி

பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !

தூக்கமின்றி

பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !

நிலா

நீ
இல்லாத இரவில்
எதுவும்
தேவை இல்லை என
கண்கள் மூடி
போகையில்
தட்டுபடுகிறது உன் முகம்
வானில் !