நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா
உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே
உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை
அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை
கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே
விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்
No comments:
Post a Comment