Saturday, May 7, 2011

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

No comments:

Post a Comment