என் மேல்
அன்பின் அளவு
யாதென
அவள் கேட்டாள்
வானத்தை கை நீட்டி
அளந்து கொள்
என்றேன்
வானத்தில் மின்னல்கள்
சிரிப்பது போல்
உன் மேல் கோபத்தை
நான் கொஞ்சம்
தெளிக்கின்றேன்
நீ மௌனத்தால்
தண்டனை கொடுக்கையிலே
மறுகணம் கொஞ்சி
சிரிக்கின்றேன்
உனை போல
அழுகின்ற
மழை இல்லை
உனை போல
படர்கின்ற
நிழல் இல்லை
உலகில்
நீயும் என் தாயும்
போல
வேறு உறவில்லை !
No comments:
Post a Comment