Saturday, May 7, 2011

என் உலகம்

என் மேல்
அன்பின் அளவு
யாதென
அவள் கேட்டாள்
வானத்தை கை நீட்டி
அளந்து கொள்
என்றேன்

வானத்தில் மின்னல்கள்
சிரிப்பது போல்
உன் மேல் கோபத்தை
நான் கொஞ்சம்
தெளிக்கின்றேன்

நீ மௌனத்தால்
தண்டனை கொடுக்கையிலே
மறுகணம் கொஞ்சி
சிரிக்கின்றேன்

உனை போல
அழுகின்ற
மழை இல்லை

உனை போல
படர்கின்ற
நிழல் இல்லை

உலகில்
நீயும் என் தாயும்
போல
வேறு உறவில்லை !

No comments:

Post a Comment