Friday, August 27, 2010

வெண்பனியும்-பெண்மணியும்

நிலவை பார்த்ததும்
உறைந்து போகிறாய் !
சூரியனை பார்த்ததும்
கறைந்து போகிறாய் !
வெண்பனிக்கு
வெப்பம் என்றாலும்
பயம் !
பெண்மணிக்கு
அப்பன் என்றாலும்
பயம் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

நியாயமா

கடலில் இருக்கும்
அலையை
கடத்துவது நியாயமா !
மேகம் என்ற பெயரில்
இந்த வில்லத்தனம் ஏனம்மா !
சுட்டெறிக்கும்
சூரியன் தந்த
தீராத தாகமா !
வேலூர் டூ கன்னியாகுமரி
மழை பொழிந்தது
போதுமா !
இருபத்துநான்கு மணிநேரம்
மழை பொழிந்தால்
அடுப்பில் சாதம் வேகுமா ?!

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

போகாதே

கால்களை விட்டு
நடந்து போகும்
பாதச்சுவடுகளின்
தடங்கள் தெரிவதில்லை !
என் காதலை
விட்டு
பிரிந்து போனால்
உன் வாழ்க்கைக்கும்
அர்த்தமில்லை !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

கனவில் வந்தேன்

நீ
வெட்கத்தில் பதிந்த
கால்விரல் கோலத்திற்கு
புள்ளி வைக்கவில்லை
என்பதை
சொல்லிப்போகவே
கனவில் வந்தேன் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

நகரம்

இங்கு
பெண்ணை பெற்ற
அப்பன்கள்
அரிவாள் தீட்டுவதில்லை !
நள்ளிரவில்
நாய்களின் ஓலங்களில்லை !
ஆறு மணியோடு
உறங்கிப் போகும்
வானமுமில்லை !
மழை வரும்போது
மண்வாசம் வீசும்
மணற்தரையுமில்லை !
கொட்டும் மழை
நேரத்திலும்
குழாயடி சண்டைக்கு
பஞ்சமுமில்லை !
கொளுத்தும்
வெயில் நேரம்
குடை விரிக்க
மரங்களும் இல்லை !
சாலையோர
சிமென்ட் புளியமரங்களில்
கிடைக்காத பொருட்களுமில்லை !
ஹார்மோன் மனிதர்கள்
சுத்தமான் ஆக்சிஜனை
சுவாசித்ததுமில்லை !
பெட்ரோல் மனிதர்கள்
சுவாசிப்பதை
நிறுத்துவதுமில்லை !
எதுவுமே இல்லை
ஆனாலும் வாழ்கிறோம்
எட்டு மணிநேர
கனவை
என்பது ஆண்டுகளாய் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

பொட்டு-ஹைக்கூ

முகம் கழுவும் போது
என்னையும் சேர்த்து
கை கழுவி விட்டாள்

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

புதிர்

மூன்றெழுத்து புதிர்
எதுவென்று கேட்டால்
காதல் என்றேன்
இல்லையென்றாள்
அன்பு என்றேன்
இல்லையென்றாள்
கவிதையென்றேன்
இல்லையென்றாள்
பதில் தெரியாமல்
நீயே சொல் என்றேன்
அவள்
எதுவும் சொல்லாமல்
கேள்வியை மட்டும்
விட்டு விட்டு
சென்றுவிட்டாள்
பின்பு தான்
தெரிந்தது
விடை மௌனம்
என்று !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

அவள் என்னும் கவிதை

பெண்ணே !
எதுகை மோனையாய்
வருவது மட்டும்
கவிதையல்ல
நீ என்
எதிரே வருவதும்
கவிதை தான் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

கண்ணாடி மலர்கள்

நான் எட்டி
பறிக்க
உடைந்து உதிர்ந்தது
அவள் கைவளை
கண்ணாடி மலர்கள் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

கல்லில் சிலையாய்

ஆனவள் நீ !


என் காதலை

மறுக்கும்
உன்
பழமை மாறாத
இதயமும்
பிடித்திருக்கிறது எனக்கு !


--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

Thursday, August 26, 2010

வேதியல் மாற்றம்

அறிவியலை மிஞ்சிய
ஒரு வேதியல்
மாற்றமா !
சூடான முத்தத்தில்
இரத்தம் உறைகிறதே !?

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Sunday, August 22, 2010

கவியரசர்

தெய்வம் வந்து
சேதி சொன்னது !
தேங்கியிருந்த இதயங்களை
தெளிய வைத்தது !
எங்கள் தேவைகள்
முடியும் முன்னே
அவர் தேதி முடிந்தது !
விண்ணை தேடிச் சென்றது !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

ஹைக்கூ

வியாபார சோழர்கள்
கட்டி வரும்
இரும்பு கோபுரங்கள்
"செல்போன் டவர்"

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

ஆகாயம் இன்று

ஆகாயம் இன்னும்
பெரிதானது !
விண்மீன் காண்பது
அரிதானது !
மேகங்கள் மோதி விளையாடுது !
தென்றல் எங்கோ
பயந்தோடுது !
என் உயிரும் உடலை
மறந்தோடு !
காதல் மனதை
களவாடுது !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

நிழல் உன்னை

நிழல் உன்னை
சேரும் முன்னே
என் ஞாபகம்
சேருமே !
கருங்கூந்தல்
காற்றில் ஆடி
கவிதைகள் சொல்லுமே !
உனை கண்ட
பின்பு தான்
உலகினை உணர்கிறேன் !
பெண் பூவில்
எத்தனை இதழ்
என்றுனை ரசிக்கிறேன் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

காயம்

கையால் சாப்பிடக்கூட முடியவில்லை
அன்பால் அடித்த
"மருதாணி காயங்கள்"

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Saturday, August 21, 2010

இதயத்தை பாரடி

என் இதயத்தை
பாரடி
அதில் இடமோ
நூறடி
விழிகளால்
விதை செய்து
விதைத்தவள் நீயடி !
தனிமை ஏனடி
அது கொடுமைதானடி
கோபத்தை தவிர்த்து
குழந்தையாய் மாறடி !
தீயின்றி சிதறும்
உன்
புன்னகை பூவெடி !
துணிந்தவன் நானடி
என் துணையும் நீயடி !
வரமொன்று கேட்கிறேன்
தருவாய்
உன் மடி !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

பொய்

பெண்ணே
நீ
பொய் பேசாதே
என்றதால் !
நான்
கவிதை கூட
எழுதுவதில்லை!!!

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

பாவி மவ

உன்
விழிப்பார்த்து
என்
மொழி மறந்தேன் !
செந்தமிழ்
துரோகி என
வீண்
பழி சுமந்தேன் !
பசி கூட
எடுக்கலையே
பாவி மவ
முகம் பார்த்து !
கவிதை ஒன்னு
எழுதட்டுமா
ஏக்கம் எனும்
பொருள்
சேர்த்து !
உனை
விழி திறந்து
பார்த்தேன் ,
காதல்
பிறந்ததடி !
மனம் திறந்து
பார்த்தேன் ,
கவிதை பிறந்து
பிறந்தடி !
உன் கை கோர்த்து
நடந்தால்
புது வாழ்க்கை
பிறக்குமடி !
காதலியே
எனை
காதலியேன் !

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

தொலை தூரக்காதல்

நம் காதல் தொடக்கக்கல்வியா ய் ஆரம்பித்து தொலை தூரக்கல்விய ாய் நிற்கிறது
இன்னும் மேல்நிலை ஆக்குவத ு எப்போது !!

--
Sent from my mobile device

முத்தம்

குழந்தையாக
இருந்தபோது
சில பெண்களிடம் வாங்கிய கடன்
இன்று
திருப்பிக்கொடுத்தால்
அடிக்கவருகிறார்கள்

--
Sent from my mobile device

அல்வா

காற்றுக்கு
சேலை கட்டி
காதல் என்றேன் !
அவள் காதுக்கு
பூ வைத்து
காமெடி என்றாள் !