Friday, August 27, 2010

புதிர்

மூன்றெழுத்து புதிர்
எதுவென்று கேட்டால்
காதல் என்றேன்
இல்லையென்றாள்
அன்பு என்றேன்
இல்லையென்றாள்
கவிதையென்றேன்
இல்லையென்றாள்
பதில் தெரியாமல்
நீயே சொல் என்றேன்
அவள்
எதுவும் சொல்லாமல்
கேள்வியை மட்டும்
விட்டு விட்டு
சென்றுவிட்டாள்
பின்பு தான்
தெரிந்தது
விடை மௌனம்
என்று !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

No comments:

Post a Comment