எதுவென்று கேட்டால்
காதல் என்றேன்
இல்லையென்றாள்
அன்பு என்றேன்
இல்லையென்றாள்
கவிதையென்றேன்
இல்லையென்றாள்
பதில் தெரியாமல்
நீயே சொல் என்றேன்
அவள்
எதுவும் சொல்லாமல்
கேள்வியை மட்டும்
விட்டு விட்டு
சென்றுவிட்டாள்
பின்பு தான்
தெரிந்தது
விடை மௌனம்
என்று !
--
Sent from my mobile device
8148715763
9600264103
No comments:
Post a Comment