Friday, August 27, 2010

நகரம்

இங்கு
பெண்ணை பெற்ற
அப்பன்கள்
அரிவாள் தீட்டுவதில்லை !
நள்ளிரவில்
நாய்களின் ஓலங்களில்லை !
ஆறு மணியோடு
உறங்கிப் போகும்
வானமுமில்லை !
மழை வரும்போது
மண்வாசம் வீசும்
மணற்தரையுமில்லை !
கொட்டும் மழை
நேரத்திலும்
குழாயடி சண்டைக்கு
பஞ்சமுமில்லை !
கொளுத்தும்
வெயில் நேரம்
குடை விரிக்க
மரங்களும் இல்லை !
சாலையோர
சிமென்ட் புளியமரங்களில்
கிடைக்காத பொருட்களுமில்லை !
ஹார்மோன் மனிதர்கள்
சுத்தமான் ஆக்சிஜனை
சுவாசித்ததுமில்லை !
பெட்ரோல் மனிதர்கள்
சுவாசிப்பதை
நிறுத்துவதுமில்லை !
எதுவுமே இல்லை
ஆனாலும் வாழ்கிறோம்
எட்டு மணிநேர
கனவை
என்பது ஆண்டுகளாய் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

No comments:

Post a Comment