Monday, August 1, 2011

உனக்கு மட்டும்

நீ மட்டும் பேசும்
கைப்பேசி ஆகவா

நீ மட்டும் படிக்கும்
குறுஞ்செய்தி ஆகவா

நீ மட்டும் பார்க்கும்
கண்ணாடி ஆகவா

நீ மட்டும் வாசிக்கும்
புத்தகம் ஆகவா

நீ மட்டும் கேட்கும்
பாடல் ஆகவா

நீ மட்டும் ரசிக்கும்
இயற்கை ஆகவா

நீ மட்டும் வசிக்கும்
தேசமாகவா

உன்னை மட்டும் நனைக்கும்
மழைத்துளி ஆகவா

உனக்காகவே வாழும்
உயிரும் ஆகவா !?

No comments:

Post a Comment