Monday, August 1, 2011

நியாயமா !

நினைவே நீ எனும்போது
மறக்க முடியுமா

கனவே நீ என்பதால்
காண மறுக்க முடியுமா

நீ பேசாது போனால்
நான் ஊமையாகிறேன்

நீ பார்க்காமல் போனால்
விழியற்று போகிறேன்

உன் பாதசுவடுகள் எனக்கு
புகைப்படம்

உன் அன்பு ஒன்றே எனக்கு
நிழற்குடை

என் இதயம் வரை தாக்கும்
நீ பெண்ணாகிய மின்னல்

என்னை வேரோடு சாய்க்கும்
நீ வயல்வெளி தென்றல்

இப்படியே வர்ணித்து
வாழ்க்கை போகுமா

மேகம் இல்லா வானம் தான்
மழையை தூருமா

நான் வானம் என்றால்
என்னுடைய மேகம் நீயம்மா

என்னோடு சேராமல் போவது
உனக்கே நியாயமா !

No comments:

Post a Comment