Monday, August 1, 2011

உயிர் தோழி

உயிர் விட்ட பூக்களெல்லாம்
உன் கூந்தலை சேருமே
உனை சேர வேண்டும் என்றால்
என் உயிரும் வேண்டுமோ

மடிந்தாலும்
விடிந்ததும்
சூரியன் உதிக்கும்

விடிந்தவுடன்
எழுந்ததும்
நெஞ்சம் உனை நினைக்கும்

வேர்க்காத தேகத்தினில்
குப்பைகள் மிஞ்சுமே

உனை பார்க்காத விழிகளுக்கு
காட்சியெல்லாம் பஞ்சமே

என் முகவரி சொல்லியே
உன் முகவரி கேட்கிறேன்

வழிந்திடும் உன் கண்ணீரில்
முழுமனதினை பார்க்கிறேன் !

No comments:

Post a Comment