Sunday, April 24, 2011

எனக்கு மட்டும்

எனக்கு மட்டும்
வேண்டும்
உன் மழை சாரல்
மழை நேர குடையாய்
என்னில் உன் நினைவுகள்
கைக்குள் அடங்கும்
நீ பேசும்
ஆயிரம் வார்த்தைகள்
எதாவது ஒன்றில்
என் நெஞ்சம்
மெருகூட்டபடுகிறது
அதிகாலை நேரம்
கேட்கும் பாடல்
இதழ்களுக்கு அடிமை
அது போலவே
அடிநெஞ்சில்
நுழைந்த உனக்கு
என் ஆயுளும் அடிமை
ஒற்றை ரூபாயில்
விழும்
பூவா தலையாய்
அடிக்கடி நெஞ்சம்
ஆடுது ஆட்டம்
கவிதை எழுத
நூற்றாண்டுகள் போதாது
நெஞ்சை நெருக்குது
கற்பனை கூட்டம்

No comments:

Post a Comment