பிரிவென்று சொல்லாதே
தூக்கமும்
கண்ணில் நில்லாதே
நீ பேசும்
வார்த்தை
நின்று போனால்
என் சுவாசமும்
செல்லும்
வனவாசம்
முதல்நாளோடு
உறவு
முறிந்து போயிருந்தால்
அந்த ஒரு
நாளோடு
முடிந்திருக்கும்
திருநாள்
நிமிடங்களை கடந்தோம்
நாட்களை கடந்தோம்
மாதங்களை கடந்தோம்
இவையாவையும்
கடந்தது
பிரிவூருக்கு செல்லத்தானோ
No comments:
Post a Comment